×

லால்குடி அருகே ஆட்டுக்குட்டியை மீட்க கிணற்றில் இறங்கிய முதியவர் தவிப்பு

*தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்

லால்குடி : திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாலமோன் (75). இவருடைய ஆட்டுக்குட்டி திடீரென கிணற்றில் தவறி விழுந்தது. அந்த கிணறு 40 ஆழம் கொண்டதாகும். இந்நிலையில் ஆட்டுக்குட்டியை மீட்க கிணற்றுக்குள் இறங்கிய சாலமோன் கயிற்றின் மூலம் ஆட்டுக்குட்டியை காப்பாற்றி மேலே மேலே கொண்டு வந்தார். ஆனால் அவரால் தொடர்ந்து கிணற்றிலிருந்து மேலே ஏறடி வரமுடியாமல் பல மணி நேரம் தவித்துக் கொண்டிருந்துள்ளார்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் சிவக்குமார், திராவிடன், தீயணைப்பு வீரர்கள் தரணிதரன், அருண்ராஜ், நவீன் தண்டாயுதபாணி, பிரகாஷ் ஆகியோர் விரைந்து சென்று கயிறு மற்றும் ஏணியின் உதவியுடன் கிணற்றில் தவித்துக்கொண்டிருந்த சாலமோனை பத்திரமாக மீட்டனர்.

The post லால்குடி அருகே ஆட்டுக்குட்டியை மீட்க கிணற்றில் இறங்கிய முதியவர் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Lalgudi ,Salomon ,Pullampadi Manakkad, Trichy district ,Dinakaran ,
× RELATED லாரி மீது வேன் மோதி 20 பேர் படுகாயம்